உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!
Jun 23, 2026, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தா? : இளைய சமுதாயத்தை காக்க கோரிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 28, 2025, 06:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள உடற்பயிற்சி கூடங்களில் விற்பனை செய்வதற்காக ஊக்க மருந்து கொண்டு செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஊக்க மருந்து பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

கட்டுமஸ்தான உடலைப் பெற யாருக்குத்தான் பிடிக்காது. முன்பு, ஓடி ஆடி உடலைச் சீராக வைத்திருந்தவர்கள், இன்றைய நவநாகரீக காலத்தில் தேடுவது உடற்பயிற்சிக் கூடங்களைத் தான். உடல் ஆரோக்கியத்திற்காக ஒரு தரப்பினர் உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடினாலும், மற்றொரு தரப்பினர் சிக்ஸ் பேக், ஃபிட்டான கட்டுமஸ்தான உடல் தோற்றத்திற்காக உடற்பயிற்சிக் கூடங்களை நோக்கி ஓடுகின்றனர்.

இதனால் உணவகங்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகளைப்போன்று உடற்பயிற்சி நிலையங்களிலும் கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியைச் சமாளித்து தங்களின் வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க சில உடற்பயிற்சி நிறுவனங்கள் குறுக்கு வழியைப் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கார் ஒன்றில் உரிய அனுமதி இன்றி கொண்டு வரப்பட்ட ஊக்க மருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அந்த ஊக்க மருந்துகள் உடற்பயிற்சி கூடங்களுக்கு விற்பனை செய்வதற்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

சமீபகாலமாக இந்த ஊக்க மருந்து பழக்கம் உடற்பயிற்சி கூடங்களில் அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இது உடலுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் எனத் தெரிவிக்கின்றனர் உடற்பயிற்சியாளர்கள். இந்த மருந்துகளை பயன்படுத்தும்போது மூளை தடுமாற்றம் அடைந்து தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் என்றும் உடற்பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்கள் ஆலோசனை இன்றி பயன்படுத்தப்படும் இதுபோன்ற ஊக்க மருந்துகளால், மாரடைப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும் இதுபோன்ற மருந்துகளை மனித உடல்களில் செலுத்தினால் நாள்பட்ட நோய்கள் கூட ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நோய்களில் இருந்து உடல்களைப் பாதுகாக்கவே உடற்பயிற்சி கூடங்களை நோக்கி வருவதாகக் கூறும் வாடிக்கையாளர்கள், உடற் பயிற்சிக்கு என்ன பயன்படுத்துகிறார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

போதைப் பழக்க வழக்கம் இளைய சமுதாயத்தைச் சீரழிக்கும் நிலையில், தற்போது உடற்பயிற்சி கூடங்களில் பரவி வரும் இந்த ஊக்க மருந்து கலாச்சாரத்தை காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமென்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: கோவை மாவட்டம்Is exercise a stimulant?: A request to protect the younger generationஉடற்பயிற்சிக்கும் ஊக்க மருந்தாஉடற்பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானை சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு தடை : மத்திய அரசு

Next Post

சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர் நீக்கம்!

Related News

முதலமைச்சர் விஜய்யின் பேச்சால் அமளி; சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு

இடைத் தேர்தலில் சீட் கிடைக்குமா ?; முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies