40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?
Aug 14, 2025, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?

Web Desk by Web Desk
Apr 29, 2025, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 40 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி இருளில் வாழ்ந்து வரும் மக்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஆண்டியப்பனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 29 கிராமங்களில் ஐயங்கொல்லை கிராமமும் ஒன்றாகும். காப்புக் காட்டிற்கு உள்ளே ஒரு மூலையில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்குச் சென்று வருவதே, சற்று கடினம்தான்.

இந்த ஊரில் 50-க்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பகுதியிலிருந்து இந்த கிராமத்தில் இவர்கள் குடியேறி உள்ளனர். இவர்களின் முதன்மை தொழிலே ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்துவது தான். எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு, இன்று வரை மின்சார வசதியும் இல்லை என்பது அவலத்தின் உச்சமே. இரவில் நிலவின் ஒளியில் வாழும், இவர்களுக்கு வெளிச்சம் அளிப்பது மண்ணெண்ணெய் விளக்குகளும், டார்ச் லைட்டும் தான்.

இவர்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு சார்ஜ் போட கூட 7 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணம் செய்து  ஆண்டியப்பனூருக்கு செல்லும் நிலையே உள்ளது. தனித் தீவில் வசிக்கும் இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியின் போது ஊராட்சி நிர்வாகம் சோலார் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் அவையும் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காமல் பழுதாகி விட்டதாகத் தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை
கிராம மக்கள். இதனால் தங்களின் பிள்ளைகள் கல்வி கற்பதிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி கொடுக்கும் அரசியல் கட்சிகளோ தங்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்று ஏமாற்றத்தையே அளிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை கிராம மக்கள். தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் ஐயங்கொல்லை கிராம மக்களுக்கு மின்சாரத்தின் மூலம் அரசு விடியலைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Living without electricity for 40 years: Will there be a solution for people suffering in the dark?tamil janam tvதிருப்பத்தூர் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

கரூர் : வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!

Next Post

மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை!

Related News

’சக்தி திருமகன்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தேசப்பிரிவினை நினைவு தினம் – ஆளுநர் மாளிகையில் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த ஆர்.என்.ரவி!

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

Load More

அண்மைச் செய்திகள்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies