40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?
Jul 29, 2026, 04:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

40 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி வாழ்க்கை : இருளில் தவிக்கும் மக்களுக்கு கிடைக்குமா தீர்வு?

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 40 ஆண்டுகளாக மின்சார வசதி இன்றி இருளில் வாழ்ந்து வரும் மக்கள் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் ஆண்டியப்பனூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட 29 கிராமங்களில் ஐயங்கொல்லை கிராமமும் ஒன்றாகும். காப்புக் காட்டிற்கு உள்ளே ஒரு மூலையில் அமைந்துள்ள இந்த கிராமத்திற்குச் சென்று வருவதே, சற்று கடினம்தான்.

இந்த ஊரில் 50-க்கும் மேற்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பகுதியிலிருந்து இந்த கிராமத்தில் இவர்கள் குடியேறி உள்ளனர். இவர்களின் முதன்மை தொழிலே ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் செய்து பிழைப்பு நடத்துவது தான். எந்தவொரு அடிப்படை வசதியும் இன்றி தவிக்கும் இவர்களுக்கு, இன்று வரை மின்சார வசதியும் இல்லை என்பது அவலத்தின் உச்சமே. இரவில் நிலவின் ஒளியில் வாழும், இவர்களுக்கு வெளிச்சம் அளிப்பது மண்ணெண்ணெய் விளக்குகளும், டார்ச் லைட்டும் தான்.

இவர்கள் பயன்படுத்தும் செல்போன்களுக்கு சார்ஜ் போட கூட 7 கிலோ மீட்டர் தூரம் சாகச பயணம் செய்து  ஆண்டியப்பனூருக்கு செல்லும் நிலையே உள்ளது. தனித் தீவில் வசிக்கும் இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் அதிமுக ஆட்சியின் போது ஊராட்சி நிர்வாகம் சோலார் மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் அவையும் சில ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்காமல் பழுதாகி விட்டதாகத் தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை
கிராம மக்கள். இதனால் தங்களின் பிள்ளைகள் கல்வி கற்பதிலும்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி கொடுக்கும் அரசியல் கட்சிகளோ தங்களிடம் இருந்து வாக்குகளைப் பெற்று ஏமாற்றத்தையே அளிப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஐயங்கொல்லை கிராம மக்கள். தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

40 ஆண்டுகளாக மின்சாரமின்றி தவிக்கும் ஐயங்கொல்லை கிராம மக்களுக்கு மின்சாரத்தின் மூலம் அரசு விடியலைத் தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: Living without electricity for 40 years: Will there be a solution for people suffering in the dark?tamil janam tvதிருப்பத்தூர் மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

கரூர் : வழக்கறிஞர் வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!

Next Post

மும்பை இந்தியன்ஸ் அணி புதிய சாதனை!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies