காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த டாக்டர் பரமேஸ்வரன் உடல் நலம் குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சென்று கேட்டறிந்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
காஷ்மீர் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த கரூரைச் சேர்ந்த டாக்டர் பரமேஸ்வரன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று நேரில் சென்று, அவரது மனைவியை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து விசாரித்தேன். தீவிர சிகிச்சை பிரிவில் அவர் உள்ளதால் அவரை நான் சந்திக்கவில்லை எனிலும், அவரது சிகிச்சைக் குழுவில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்களிடம் அவரது சிகிச்சைக் குறித்து தெளிவு பெற்றேன்.
மேலும், பாஜக சார்பாக எந்த உதவியானாலும், அதை செய்யத் தயாராக உள்ளோம் என்ற உத்தரவாதத்தையும் அவரது மனைவியிடம் அளித்தேன்.
கூட்டு பிரார்த்தனைக்கு பலன் உண்டு. டாக்டர் பரமேஸ்வரன் வெகு விரைவில் உடல் நலம் தேறி, பூரண குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்வோம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.