பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு இன்று கூடவுள்ள நிலையில் பிரதமர் இல்லத்தில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு புதன்கிழமை கூட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது.
இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதி அனில் சவுகான், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி மற்றும் விமானப்படை தலைமை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் தீவிரவாதத்தை நசுக்க முப்படைகளுக்கும் பிரதமர் மோடி முழு சுதந்திரம் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஆலோசனை நடத்தினர்.