பாகிஸ்தானுக்கு எந்த விதமான ராணுவ உதவிகளையும் செய்யவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலையடுத்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், பாகிஸ்தானுக்கு துருக்கி ராணுவ உதவியை வழங்கியதாக தகவல் வெளியானது. கராச்சியில் உள்ள விமானப்படை தளத்துக்கு துருக்கி விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் சென்றதாகவும், அதில் ஏராளமான ராணுவ தளவாடங்கள் எடுத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது.
விமானத்தின் வருகையை இரு நாடுகளும் உறுதி செய்தபோதிலும், அவற்றில் எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் குறித்து தகவல் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அனுப்பவில்லை என துருக்கி விளக்கமளித்துள்ளது. மேலும் சரக்கு விமானம் மட்டுமே பாகிஸ்தானுக்கு சென்றதாகவும் துருக்கி தெரிவித்துள்ளது.