வாடிவாசல் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் 1-ம் தேதி வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.
இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதற்கான பணிகளில் வெற்றிமாறன் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.