சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!
Aug 24, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!

Web Desk by Web Desk
May 1, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் குறித்தும் அதனை மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் நோக்கத்தில் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் அதற்கான முன்கட்ட பணிகள் தொடங்கின. மத்திய அரசின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் சாலையின் இருபுறமும் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டன.

பொது பாதைகள் எவ்வித சிரமுமின்றி நடக்கத் திறக்கப்பட்ட நடைபாதை தற்போது நடக்கவே முடியாத அளவிற்குக் காட்சியளிக்கின்றன. போக்குவரத்து நெரிசலின் போது பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது முழுவதும் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியாகக் காட்சியளிக்கின்றன. நடைபாதை வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.

வணிக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் சென்னை தி.நகர் போன்ற பகுதிகளில் வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

நடைபாதைகளை வாகனங்கள் மட்டுமல்ல சாலையோர வியாபாரக் கடைகளும் ஆக்கிரமித்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. சாலையோர வியாபாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சென்னை மாநகராட்சி இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதசாரிகளுக்குச் சிறந்த நடைபாதைகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துவரும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட நடைபாதைகளும் ஆக்கிரமிப்புகளால் நிறைந்திருப்பது விபத்துகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.  நடைபாதை நடப்பதற்கே என்ற பெயர்ப் பலகை வைப்பதோடு நிறுத்திவிடாமல் அதனைச் செயல்படுத்துவதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: A continuing problem in Chennai: Footpaths turned into parking lotst nagar chennaiT nagar newsCHENNAI NEWSchennai corporation
ShareTweetSendShare
Previous Post

இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு!

Next Post

இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன்!

Related News

சட்டவிரோத சூதாட்டம், காங். எம்எல்ஏ கைது : அமலாக்கத்துறை சோதனையில் அள்ள அள்ள பணம் – சிறப்பு தொகுப்பு!

புற்று நோயாளிகளுக்கு GOOD NEWS : நம்பிக்கை தரும் தடுப்பூசி – சிறப்பு தொகுப்பு!

பழனி அருகே தேனீர் அருந்திக்கொண்டிருந்தவர் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை!

திருமணம் செய்து கொள்ள காதலன் மறுப்பு : 7-வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

திருத்தணி அருகே மின்சாரம் தாக்கியவர் மருத்துவமனையில் அனுமதி – பழுதை சரி செய்ய மின்மாற்றியில் ஏறியபோது நிகழ்ந்த சோகம்!

காரைக்குடி அருகே வணிகர் சங்கத்தின் சார்பில் மாட்டுவண்டி எல்கை பந்தயம்!

Load More

அண்மைச் செய்திகள்

இபிஎஸ் தான் என்டிஏ கூட்டணி முதல்வர் வேட்பாளர் – நயினார் நாகேந்திரன் உறுதி!

ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பின் முதல் சோதனை வெற்றி!

கூடலுார் பகுதியில் சாமந்தி பூ விளைச்சல் சரிவு – விவசாயிகள் கவலை!

உலக விண்வெளி சக்திகளிடையே உயர்ந்து நிற்கும் இந்தியாவிற்கு ககன்யான் திட்டம் சான்று – ராஜ்நாத் சிங் பெருமிதம்!

மழை வருது… மழை வருது… குடை கொண்டு வா – அரசுப்பேருந்தின் அவலம்!

ஊழியரை மதுபோதையில் தாக்கியதாக குற்றச்சாட்டு – கோவிலம்பாக்கம் ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்!

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies