சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!
Jan 14, 2026, 01:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் குறித்தும் அதனை மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் நோக்கத்தில் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் அதற்கான முன்கட்ட பணிகள் தொடங்கின. மத்திய அரசின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் சாலையின் இருபுறமும் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டன.

பொது பாதைகள் எவ்வித சிரமுமின்றி நடக்கத் திறக்கப்பட்ட நடைபாதை தற்போது நடக்கவே முடியாத அளவிற்குக் காட்சியளிக்கின்றன. போக்குவரத்து நெரிசலின் போது பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது முழுவதும் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியாகக் காட்சியளிக்கின்றன. நடைபாதை வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.

வணிக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் சென்னை தி.நகர் போன்ற பகுதிகளில் வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

நடைபாதைகளை வாகனங்கள் மட்டுமல்ல சாலையோர வியாபாரக் கடைகளும் ஆக்கிரமித்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. சாலையோர வியாபாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சென்னை மாநகராட்சி இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதசாரிகளுக்குச் சிறந்த நடைபாதைகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துவரும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட நடைபாதைகளும் ஆக்கிரமிப்புகளால் நிறைந்திருப்பது விபத்துகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.  நடைபாதை நடப்பதற்கே என்ற பெயர்ப் பலகை வைப்பதோடு நிறுத்திவிடாமல் அதனைச் செயல்படுத்துவதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: T nagar newsCHENNAI NEWSchennai corporationA continuing problem in Chennai: Footpaths turned into parking lotst nagar chennai
ShareTweetSendShare
Previous Post

இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு!

Next Post

இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies