சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!
Jun 15, 2026, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னையில் நீடிக்கும் அவலம் : வாகனம் நிறுத்துமிடமாக மாறிய நடைபாதைகள்!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 02:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. வாகன நிறுத்துமிடங்களாகவும், சாலையோர வியாபார கடைகளாகவும் காட்சியளிக்கும் நடைபாதைகள் குறித்தும் அதனை மீட்க வேண்டிய அவசியம் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சென்னை மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் நோக்கத்தில் தி.நகர் பாண்டிபஜார் பகுதியில் அதற்கான முன்கட்ட பணிகள் தொடங்கின. மத்திய அரசின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு சுமார் 800 மீட்டர் நீளத்திற்குச் சாலையின் இருபுறமும் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பில் நடைபாதை கட்டி முடிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டன.

பொது பாதைகள் எவ்வித சிரமுமின்றி நடக்கத் திறக்கப்பட்ட நடைபாதை தற்போது நடக்கவே முடியாத அளவிற்குக் காட்சியளிக்கின்றன. போக்குவரத்து நெரிசலின் போது பொதுமக்கள் நடப்பதற்காக அமைக்கப்பட்ட நடைபாதை தற்போது முழுவதும் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் பகுதியாகக் காட்சியளிக்கின்றன. நடைபாதை வாகன நிறுத்துமிடமாக மாறிவிட்டதால் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்கத் தொடங்கியுள்ளனர்.

வணிக நிறுவனங்கள் நிறைந்திருக்கும் சென்னை தி.நகர் போன்ற பகுதிகளில் வார இறுதி நாட்கள் மட்டுமல்லாது வார நாட்களிலும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவிலேயே இருக்கிறது. இப்படியான சூழலில் குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை பயன்படுத்தும் நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

நடைபாதைகளை வாகனங்கள் மட்டுமல்ல சாலையோர வியாபாரக் கடைகளும் ஆக்கிரமித்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. சாலையோர வியாபாரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் சென்னை மாநகராட்சி இப்பிரச்சனையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனப் பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதசாரிகளுக்குச் சிறந்த நடைபாதைகள் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துவரும் நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட நடைபாதைகளும் ஆக்கிரமிப்புகளால் நிறைந்திருப்பது விபத்துகளுக்கும் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது.  நடைபாதை நடப்பதற்கே என்ற பெயர்ப் பலகை வைப்பதோடு நிறுத்திவிடாமல் அதனைச் செயல்படுத்துவதிலும் மாநகராட்சி கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: A continuing problem in Chennai: Footpaths turned into parking lotst nagar chennaiT nagar newsCHENNAI NEWSchennai corporation
ShareTweetSendShare
Previous Post

இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவு சீட்டு இணையதளத்தில் வெளியீடு!

Next Post

இந்து மத துறவி சின்மோய் கிருஷ்ண தாஸுக்கு ஜாமீன்!

Related News

3வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; நயினார் நேரில் ஆறுதல்

சபரிமலையில் சாமி தரிசனம் செய்த அன்புமணி தம்பதி

தவெக எம்.எல்.ஏவுக்காக காத்திருந்த மூத்த தலைவர்; இவருக்கு இந்த கதியா ?

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies