தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 23-ஆம் தேதி தொடங்கி சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 7-ஆம் தேதி நடைபெறுகிறது.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்தனர்.