இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களைக் கைப்பற்ற வேண்டும் என வங்கதேசத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் இதைச் செய்ய வேண்டும் எனவும் முகமது யூனுஸ்க்கு அவர் பரிந்துரைத்துள்ளார்.
இதற்கான ராணுவ ஒத்துழைப்புக்குச் சீனாவை அணுகிக் கூட்டு ராணுவ அமைப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.