மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை கோகோ காப் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அரினா சபலென்கா, 6 க்கு 3, 7 க்கு 6 என்ற செட் கணக்கில் கோகோ காபை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டில் மூன்றாவது பட்டத்தை சபலென்கா கைப்பற்றினார்.