எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
Oct 5, 2025, 12:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு – குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

Web Desk by Web Desk
May 6, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இப்படி கண்களைப் பறிக்கும் தண்ணீருடன் தகதகவென மின்னும் வைகை அணை. ஆனால் வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறோ காய்ந்து கட்டாந்தரைபோல் காட்சியளிப்பது பலரையும் வேதனைப்பட வைத்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி  நடைபெறுவது வழக்கம்.

8  ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது  மூல வைகை ஆறு. வைகை அணையின் முக்கிய நீராதாரமாகவும் விளங்கி வரும் மூல வைகை ஆறுதான் தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்த காரணத்தாலும், அவ்வப்போது பெய்த கோடை மழையாலும்  வெயில் காலங்களில்கூட மூல வைகை ஆற்றில் நீர் வரத்து கணிசமாக இருந்தது. ஆனால்  இந்த ஆண்டோ பருவ மழை சரியாகப் பெய்யாத நிலையில் மூல வைகை ஆறு கடந்த ஒரு மாதமாகத் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு மணல் மேடாக காட்சியளிக்கிறது.  மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் செல்லும் நடைபாதையாக மாறி வருகிறது

மூல வைகை ஆறு தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கடமலை – மயிலை ஒன்றிய பகுதிகளில் 10 முதல் 15  நாட்களுக்கு ஒரு முறையே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனால் விவசாயமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். மூல வைகை ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட உறைக் கிணறுகளை முறையாகத் தூர்வாரியும், பொது மக்களுக்குத் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

எப்படி இருந்த  மூல வைகை ஆறு இப்படி ஆயிடுச்சே என்பதே பொதுமக்கள், விவசாயிகளின் பெருமூச்சாக இருக்கிறது. குடிநீர்த் தேவையும், விவசாயமும் என்ன ஆகுமோ என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Tags: குடிநீர் தட்டுப்பாடுtamil janam tvtamil nadu news todaytn agricultureHow did the river become like this...?: The dried-up Vaigai River poses a risk of water shortage
ShareTweetSendShare
Previous Post

போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!

Next Post

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies