எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு - குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!
Apr 29, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

எப்படி இருந்த ஆறு இப்படி ஆயிடுச்சே..? : வறண்ட மூல வைகை ஆறு – குடிநீர் தட்டுப்பாடு அபாயம்!

Murugesan M by Murugesan M
May 6, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறு பாலைவனம் போல் வறண்டு கிடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இப்படி கண்களைப் பறிக்கும் தண்ணீருடன் தகதகவென மின்னும் வைகை அணை. ஆனால் வைகை அணையின் முக்கிய நீராதாரமாக விளங்கி  வரும் மூல வைகை ஆறோ காய்ந்து கட்டாந்தரைபோல் காட்சியளிப்பது பலரையும் வேதனைப்பட வைத்துள்ளது.

தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளி மலையில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. இதன் மூலம் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி  நடைபெறுவது வழக்கம்.

8  ஊராட்சிகளில் 100க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களுக்குக் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது  மூல வைகை ஆறு. வைகை அணையின் முக்கிய நீராதாரமாகவும் விளங்கி வரும் மூல வைகை ஆறுதான் தற்போது பாலைவனமாகக் காட்சியளிக்கிறது.

கடந்த ஆண்டு பருவமழை நன்றாகப் பெய்த காரணத்தாலும், அவ்வப்போது பெய்த கோடை மழையாலும்  வெயில் காலங்களில்கூட மூல வைகை ஆற்றில் நீர் வரத்து கணிசமாக இருந்தது. ஆனால்  இந்த ஆண்டோ பருவ மழை சரியாகப் பெய்யாத நிலையில் மூல வைகை ஆறு கடந்த ஒரு மாதமாகத் தண்ணீர் வரத்து இன்றி வறண்டு மணல் மேடாக காட்சியளிக்கிறது.  மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் செல்லும் நடைபாதையாக மாறி வருகிறது

மூல வைகை ஆறு தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுவதால் இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே கடமலை – மயிலை ஒன்றிய பகுதிகளில் 10 முதல் 15  நாட்களுக்கு ஒரு முறையே கூட்டுக் குடிநீர் திட்டக் குழாய் மூலம் குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதற்காக நீண்ட நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனால் விவசாயமும் கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் பொதுமக்கள் வேதனையில் உள்ளனர். மூல வைகை ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்ட உறைக் கிணறுகளை முறையாகத் தூர்வாரியும், பொது மக்களுக்குத் தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யத் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

எப்படி இருந்த  மூல வைகை ஆறு இப்படி ஆயிடுச்சே என்பதே பொதுமக்கள், விவசாயிகளின் பெருமூச்சாக இருக்கிறது. குடிநீர்த் தேவையும், விவசாயமும் என்ன ஆகுமோ என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

Tags: குடிநீர் தட்டுப்பாடுtamil janam tvtamil nadu news todaytn agricultureHow did the river become like this...?: The dried-up Vaigai River poses a risk of water shortage
ShareTweetSendShare
Previous Post

போர் வந்தால் 4 நாட்கள் தான் தாக்குப்பிடிக்க முடியும் – கதறும் பாகிஸ்தான் ராணுவம்!

Next Post

21 உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு!

Related News

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies