தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்றால் 50 தொகுதிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கக் கூடியவர்கள் நாங்களாகத் தான் இருப்போம் என ஐபெட்டோ அகில இந்திய தேசிய செயலாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்ற வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற வில்லை எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னதை மட்டும் செய்தால் போதும் சொல்லாததைச் செய்ய வேண்டாம் எனவும் விமர்சித்தார்.