தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!
Oct 1, 2025, 12:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

Web Desk by Web Desk
May 9, 2025, 08:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர்- பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கொடுத்த பதிலடியில்  காந்தகார் விமானக் கடத்தல், உள்ளிட்ட பல்வேறு  பயங்கரவாத தாக்குதல்களின் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப் பட்டுள்ளார்.  பாகிஸ்தான் வான் எல்லைக்குள் அத்துமீறி செல்லாமல், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து கொன்றவர்களைக் கொன்ற ஆப்ரேஷன் சிந்தூர்  பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகள் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். இதன் பின்னணியில் பாகிஸ்தான் இராணுவமும்,அந்நாட்டு உளவுத் துறையும் இருந்ததை இந்தியா உறுதி செய்தது.

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய ஒவ்வொரு பயங்கரவாதியும் அடையாளம் கண்டு  தண்டனை வழங்கப்படும் என்று கூறியதற்கேற்ப, கடந்த செவ்வாய்க் கிழமை நள்ளிரவு இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து நடத்திய ‘ஒருங்கிணைந்த மற்றும் துல்லியமான’ தாக்குதல்களை ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடத்தியது.

மௌலானா மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது, ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் சையத் சலாவுதீனின் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய முக்கியமான மூன்று முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் உள்ள 21 பயங்கரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதில் 5 இடங்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், 4 இடங்கள் பாகிஸ்தானிலும் உள்ளன.

விரிவான உளவுத் துறை தகவல்களின் அடிப்படையில் இந்த 9 இலக்குகளும் துல்லியமாகத் தேர்வு செய்யப்பட்டுக் கன கச்சிதமாகத் தாக்குதல்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதில், பஹ்வல்பூர் மற்றும் முரிட்கேவில் உள்ள முகாம்களில் தான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளான  அஜ்மல் கசாப் மற்றும் டேவிட் கோல்மன் ஹெட்லி  பயிற்சி பெற்ற முகாம்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது.  இரண்டு பயங்கரவாத முகாம்களிலும் சுமார் 30க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில், தடை செய்யப்பட்ட  ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவரான மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், பயங்கரவாதிகள் 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு முன், வேறு இடத்தில் பதுங்கியதால் மசூத் தப்பித்ததாகக் கூறப்படுகிறது.

மசூத் அசாரின் அக்கா, அவரது கணவர், மருமகன் மற்றும் அவரது மனைவி, மருமகள் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட நான்கு உதவியாளர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவூப் அசாரும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப் பட்டுள்ளது.

பயங்கரவாதியான மசூத் அசாரை 1994ம் ஆண்டு, இந்திய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதனைத் தொடர்ந்து, 1999ம் ஆண்டு, 154 பயணிகளுடன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பயங்கரவாதிகள் கடத்தினர். மசூத் அசார் உட்பட 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மசூத் விடுவிக்கப்பட்டார்.

1999-ல்  கந்தஹார் விமானக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதிதான் அப்துல் ரவூப் அசார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் , 9 பயங்கரவாத தளங்கள் மீது நடத்திய தாக்குதலில், சுமார்100 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களின் செயற்கைக் கோள் படங்கள்,  தாக்குதலின் தாக்கத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆப்ரேஷன் சிந்தூர் என்பது, பஹல்காம் தாக்குதலுக்கு மட்டுமல்ல,  2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் பாகிஸ்தான் நடத்திய அனைத்து பயங்கரவாதச் செயல்களுக்கான  பதிலடியாகும். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கும் நடவடிக்கையாகும்.

பாகிஸ்தானின் எந்த ராணுவ நிலைகள் மீதும் தாக்குதல் நடத்தாமல், பொதுமக்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து, அளவிடப்பட்ட தாக்குதலை இந்தியா நடத்தியுள்ளது. இந்தியாவின் தார்மீகப் பொறுப்புணர்வையும், தர்மத்தையும் ஆப்ரேஷன் சிந்தூர், உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது.

பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணாகப் பாகிஸ்தான் உள்ளது என்பதை, ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா உலகத்துக்கு ஆதாரத்துடன் காட்டியுள்ளது. மேலும் சர்வதேச அளவில் பாகிஸ்தானின் பிம்பத்தைச் சுக்கு நூறாக நொறுக்கியுள்ளது இந்தியா.

இதன் பிறகு இருநாடுகளுக்குமான உறவு பழைய மாதிரி இருக்காது என்றும்,பாகிஸ்தானில் உள்ள கடைசி பயங்கரவாதியைக் கொல்லும் வரை ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்று ராணுவ  வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Tags: pakistan warஆப்ரேஷன் சிந்தூர்Pakistan's image in tatters: Kandahar plane hijacking suspect killedகாந்தகார் விமான கடத்தல் குற்றவாளி
ShareTweetSendShare
Previous Post

தானியங்கள் போதுமான அளவு இருப்பு உள்ளன : சிவராஜ் சிங் சவுகான்

Next Post

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

அபாயகரமாக காட்சியளிக்கும் ஆட்சியரகம் : நிதி ஒதுக்கியும் தொடங்காத பணிகள்!

மந்த கதியில் துார்வாரும் பணி : பெரிய ஏரி கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக புகார்!

முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும் : அண்ணாமலை

மக்களைப் பதற்றத்திலும் அச்சத்திலும் நிலைகுலைய வைப்பது தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

மும்பை விமான நிலையத்தில் கர்பா நடனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies