இணையத்தில் OPERATION SINDOOR - நடந்தது எப்படி?
Jun 7, 2026, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இணையத்தில் OPERATION SINDOOR – நடந்தது எப்படி?

Murugesan M by Murugesan M
May 9, 2025, 08:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய எல்லைக்குள் இருந்தபடியே நமது ராணுவம் OPERATION SINDOOR-ஐ நிகழ்த்தியது எப்படி என்பது தொடர்பாக வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

பஹல்காம் தாக்குதலுக்குக் கொடுக்கப்பட்ட பதிலடியில் ரபேல் விமானங்கள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. OPERATION SINDOOR-ன் சிறப்பம்சமே பாகிஸ்தான் வான்வெளிக்குள் செல்லாமல் தாக்குதல் நடத்தப்பட்டதுதான். அது எப்படி என்பது பற்றி வரைகலை வீடியோ ஒன்று இணையத்தில் உலாவுகிறது.

அதில், இந்திய – பாகிஸ்தான் எல்லைக்கோட்டிலிருந்து 100 முதல் 200 கிலோ மீட்டர் தொலைவுக்குள் நின்று ரபேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக உயரத்தில் இந்திய எல்லைக்குள்ளேயே நின்ற ரபேல் விமானங்கள் SCALP ஏவுகணைகளை ஏவித் தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது. SCALP ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இரவு நேரத்தில் இருள் சூழ்ந்த இடங்களிலும் துல்லியமாகத் தாக்குதல் நடத்தும். ரேடாரில் சிக்காமல் கட்டடங்களையும் பதுங்கு குழிகளையும் முற்றிலுமாக அழிக்கும் திறன் கொண்டது.

அதேபோல் ஹரியானாவின் அம்பாலா நகரத்தில் உள்ள விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற ரபேல் விமானங்கள் KOTLI, BHIMBER ஆகிய இடங்களில் HAMMER குண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது.

HAMMER குண்டுகள் விரைவாகச் சென்று இலக்கை தாக்கக்கூடியவை. JAMMER-களால் இவற்றைத் தடுக்க முடியாது. குறைந்த உயரத்திலிருந்தே வீசப்படுவதால் இடைமறிப்பதும் கடினம்.

இதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் BAREILLY-ல் இருந்து புறப்பட்ட சுகோய் 30 MKI விமானங்கள் பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 400 முதல் 500 கிலோமீட்டர் தொலைவுக்குச் சென்று பிரமோஸ் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாகச் செல்வதால் பிராமோஸை தடுத்து நிறுத்த எதிரிகளுக்கு அதிக நேரம் இருக்காது.

ஏவுகணைகள் மட்டுமின்றி ட்ரோன்கள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளது. ரஜோரி மற்றும் பூஞ்ச்சில் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: india pakistan war\OPERATION SINDOOR on the Internet - How did it happen?
ShareTweetSendShare
Previous Post

தரைமட்டமான பாகிஸ்தான் பிம்பம் : கொல்லப்பட்ட காந்தகார் விமான கடத்தல் குற்றவாளி!

Next Post

26 நகரங்களை குறிவைத்து பாக். ராணுவம் ட்ரோன் தாக்குதல் – வெற்றிகரமாக தாக்கி அழித்த இந்தியா!

Related News

உலகச் சுற்றுச்சூழல் தினம் – ஆரோவில் நகரில் கோலாகலம்!

Su-57 போர் விமான திட்டம் : இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயார் என புதின் அறிவிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கு எதிரான பொருளாதார தடைகள், பூமராங் போலத் திரும்பி வந்து தாக்கும் – ரஷ்ய அதிபர் புதின்

அந்தமான் கடற்பகுதியில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – ஹர்தீப் சிங் பூரி வாழ்த்து!

இந்தியாவின் வளர்ச்சி வேகம் வலுவாக தொடர்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.7 சதவீதமாக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறை கொள்கை – விரைவில் முதல்வர் அறிவிப்பார் என ஆதவ் அர்ஜூனா தகவல்!

குதிரை பேர புகார் – சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ. 29 உயர்வு – சென்னையில் ரூ.928. 50க்கு விற்பனை!

கோவையை உலுக்கிய வழக்கு; போலீஸ் விசாரணை நிறைவு

சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் சுழற்சி முறையில் 2 மணி நேரம் வரை மின்தடை? பொதுமக்கள் அதிருப்தி!

செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி ஆளுநருக்கு தமிழக அரசு கடிதம்!

தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள்!

சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு விருது – சென்னை மாநகர காவல் ஆணையர் வழங்கினார்!

திருப்பரங்குன்றத்தில் முந்தைய நடைமுறைப்படியே தீபம் ஏற்றப்படும் – அமைச்சர் நிர்மல்குமார் உறுதி!

இப்படி ஒரு கெட்ட மதியாளரை தூக்கி சுமந்தோமே – ராகுல் குறித்து திமுக விரக்தி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies