கோவை புதூரில் வரும் 17-ம் தேதி நடைபெறவிருந்த இளையராஜாவின் இசைக்கச்சேரி ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு மாற்றுத் தேதியை அறிவித்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நாடு தற்போதுள்ள பதற்றமான சூழலில் இசைக்கச்சேரி வைத்தால் சரியாக இருக்காது என்பதால், 17-ம் தேதி நடைபெறவிருந்த இசைக் கச்சேரியை ஜூன் 7-ம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இசைக்கச்சேரி சிறப்பாக நடைபெற வேண்டும் எனப் பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.