பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!
Apr 29, 2026, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, பொள்ளாச்சியைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததோடு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிவடைந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என  நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதிகபட்சமாக 2வது குற்றவாளி திருநாவுக்கரசர் மற்றும் 5வது குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 3வது குற்றவாளி சதீஷ் மற்றும் 7வது குற்றவாளி ஹெரன்பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பிற குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கியும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாகத் தண்டனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: DMKபொள்ளாச்சி பாலியல் வழக்குPollachi sex case: 9 accused sentenced to life imprisonment till deathகோவை மகிளா நீதிமன்றம்
ShareTweetSendShare
Previous Post

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

Next Post

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Related News

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies