பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!
Jul 29, 2026, 03:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

Murugesan M by Murugesan M
May 13, 2025, 07:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ, பொள்ளாச்சியைச் சேர்ந்த 9 பேரைக் கைது செய்ததோடு, கோவை மகளிர் நீதிமன்றத்தில் 2019ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.

பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விரைந்து விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 2023ஆம் ஆண்டு கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.

வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதி வாதம் முடிவடைந்த நிலையில்  தீர்ப்பு வழங்கப்பட்டது.  அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என  நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

அதிகபட்சமாக 2வது குற்றவாளி திருநாவுக்கரசர் மற்றும் 5வது குற்றவாளி மணிவண்ணனுக்கு 5 ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 ஆயுள் தண்டனையும், 3வது குற்றவாளி சதீஷ் மற்றும் 7வது குற்றவாளி ஹெரன்பால் ஆகியோருக்கு தலா 3 ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், பிற குற்றவாளிகளுக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை வழங்கியும் நீதிபதி ஆணையிட்டுள்ளார். இந்நிலையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றத்திற்காக 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனையும், மற்ற சட்டப் பிரிவுகளின் கீழ் தனித் தனியாகத் தண்டனைகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட சட்ட உதவி மையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags: கோவை மகிளா நீதிமன்றம்DMKபொள்ளாச்சி பாலியல் வழக்குPollachi sex case: 9 accused sentenced to life imprisonment till death
ShareTweetSendShare
Previous Post

இளையராஜாவின் கோவை இசைக்கச்சேரி தேதி மாற்றம்!

Next Post

2040-ஆம் ஆண்டு மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies