ராணி அஹல்யாபாய் ஹோல்கர்300-வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதத்தின் தத்துவமே ஆணும் பெண்ணும் சமமென்பதுதான். கல்வி, ஆட்சி, வீரம் எல்லாவற்றிலும் ஆண்களுக்கு நிகராக அல்லது ஒருபடி மேலேயே நமது பெண்கள் சிறந்து விளங்கிய தருணங்கள் பல உண்டு. இப்படி சிறந்து விளங்கிய ஒப்பற்ற மங்கையர்கரசி, மராட்டிய சாம்ராஜ்யத்தின் பேரரசி ராணி அகல்யாபாய் ஹோல்கர் என தெரிவித்துள்ளார்.
பாரத நிலத்தை ஆன்மீக ரீதியாக இணைக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் 8 ஜோதிர்லிங்க கோவில்களை புனரமைத்த புண்ணியவதி. நமது இராமநாத சுவாமிக்கும், காசி விஸ்வநாதருக்கும் அன்றாடம் காசி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் அபிஷேகங்களுக்கு கொண்டு சேர்ப்பித்த தனிப்பெருஞ்செல்வி.
அப்படிப்பட்ட சீர்மையோங்கு ராணி அஹல்யாபாய் ஹோல்கர் அவர்களின் 300-வது பிறந்தநாள் விழாவில் இன்று கலந்து கொண்டதில் பெருமை கொள்கிறேன்.
தமிழக பாஜக-வின் தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழக RSS-இன் மாநில இணை செயலாளர் திரு. ராமகிருஷ்ண பிரசாத் , முன்னாள் கேபினட் அமைச்சரும் தற்போதையை ஆந்திர பாஜக-வின் மாநிலத் தலைவர் திருமதி. புரந்தேஸ்வரி
அவர்கள், தமிழக பாஜக துணை மாநிலத் தலைவர் திரு. @KaruNagarajan
தமிழக பாஜக மகளிரணி தலைவி திருமதி. உமாரதி, , உள்ளிட்டோர் பங்கேற்றதாக நயினார நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.