மோகன்லாலின் ’தொடரும்’ படம் கேரளாவில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இப்படம் கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலை எட்டி சாதனை பட்டியலில் இணைந்துள்ளது.
மேலும், 200 கோடி ரூபாய் உலகளாவிய வசூலுடன், மூன்றாவது அதிக வசூல் செய்த மலையாள படமாகவும் இது மாறியுள்ளது. மேலும், இப்படத்தை காண்பதற்காக தற்போதும் ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர்.