ஆமை வேகம்...அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Mar 15, 2026, 05:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையோரங்களில் நிறைந்திருக்கும் ராட்சத கருவிகளும் சாலைகளில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும் விபத்து ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்கியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, சாலைப்பணி என ஒரே நேரத்தில் முறையான ஒருங்கிணைப்பின்றி நடைபெறும் பணிகள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன. அதோடு எந்தவித திட்டமிடலுமின்றி நடைபெறும் மெட்ரோ பணிகளும் இணைந்திருக்கிறது.  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக எந்தவித  மாற்றுச்சாலைகள் ஏற்பாடுகளின்றி பல சாலைகள் மூடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் மையப்பகுதிகளாகத் திகழும் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மெட்ரோ பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் பணி முடிக்கப்பட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களும் மூடப்படாமல் இருப்பது விபத்தை உண்டாக்கும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

பரபரப்பாக இயங்கும் சென்னையில் பணிக்குச் செல்லும் அவசரத்தில் பயணிப்போருக்கு மெட்ரோ ரயில் பணிகள் தடையாக இருப்பதும், குறுகலான சாலைகளின் இருபுறமும் ராட்சத கருவிகளைப் போட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் பல இடங்களில் தடுப்புகளைப் பல மாதங்களாக வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலால் தினசரி பல இன்னல்களைச் சந்திக்கும் பாதசாரிகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல திட்டமிடும் போது முன்கூட்டியே கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சென்னை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியம் தான் என்றாலும் அதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாகத் திட்டமிட்டு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Chennai Metro trainTurtle speed...indifference: People in extreme distress due to metro rail workமெட்ரோ ரயில் பணிchennai metro work
ShareTweetSendShare
Previous Post

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies