ஆமை வேகம்...அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் - சிறப்பு தொகுப்பு!
Jan 14, 2026, 05:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஆமை வேகம்…அலட்சியம் : மெட்ரோ ரயில் பணிகளால் தீரா துயரத்தில் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
May 15, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை மாநகரில் ஆமை வேகத்தில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சாலையோரங்களில் நிறைந்திருக்கும் ராட்சத கருவிகளும் சாலைகளில் போடப்பட்டிருக்கும் பள்ளங்களும் விபத்து ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்கியுள்ளது.

மழைநீர் வடிகால் பணிகள், பாதாளச் சாக்கடைத் திட்டம், குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி, சாலைப்பணி என ஒரே நேரத்தில் முறையான ஒருங்கிணைப்பின்றி நடைபெறும் பணிகள் சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கான அடிப்படை காரணமாக அமைந்திருக்கின்றன. அதோடு எந்தவித திட்டமிடலுமின்றி நடைபெறும் மெட்ரோ பணிகளும் இணைந்திருக்கிறது.  மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்காக எந்தவித  மாற்றுச்சாலைகள் ஏற்பாடுகளின்றி பல சாலைகள் மூடப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையின் மையப்பகுதிகளாகத் திகழும் வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் மெட்ரோ பணிகள் ஆமைவேகத்தில் நடைபெற்று வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. சில இடங்களில் பணி முடிக்கப்பட்ட சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்களும் மூடப்படாமல் இருப்பது விபத்தை உண்டாக்கும் ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

பரபரப்பாக இயங்கும் சென்னையில் பணிக்குச் செல்லும் அவசரத்தில் பயணிப்போருக்கு மெட்ரோ ரயில் பணிகள் தடையாக இருப்பதும், குறுகலான சாலைகளின் இருபுறமும் ராட்சத கருவிகளைப் போட்டு போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பணிகளையும் மேற்கொள்ளாமல் பல இடங்களில் தடுப்புகளைப் பல மாதங்களாக வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து நெரிசலால் தினசரி பல இன்னல்களைச் சந்திக்கும் பாதசாரிகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல திட்டமிடும் போது முன்கூட்டியே கூடுதல் நேரத்தை ஒதுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வளர்ந்து வரும் சென்னை போன்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் அவசியம் தான் என்றாலும் அதற்காக மேற்கொள்ளப்படும் பணிகளை முறையாகத் திட்டமிட்டு வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்வதில் மெட்ரோ ரயில் நிர்வாகமும் தமிழக அரசும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது.

Tags: Turtle speed...indifference: People in extreme distress due to metro rail workமெட்ரோ ரயில் பணிchennai metro workChennai Metro train
ShareTweetSendShare
Previous Post

காட்சிப் பொருளான இ-சேவை மையங்கள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

வக்பு சட்டத்திருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு : 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies