காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 80 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகப் போர் நீடித்து வருகிறது. இந்த சூழலில், வடக்கு காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை நெருங்குகிறது.