கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!
Jul 1, 2025, 08:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

Web Desk by Web Desk
May 16, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் இலவம்பஞ்சின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியிருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகி வெளிநாடு வரை ஏற்றுமதி செய்யப்படும் இலவம் பஞ்சு குறித்தும், அதன் விலை இறக்கம் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமே திகழ்ந்து வருகிறது. அத்தகைய மாவட்டத்தில் நான்கு திசைகளும் மலைப்பகுதியை உள்ளடக்கிய கடமலை – மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தென்னை, முருங்கை, இலவம்பஞ்சு, அவரை, கப்பைக் கிழங்கு உள்ளிட்டவைகளோடு, இலவம் பஞ்சு விவசாயமும் பிரதானமாக விளங்கிவருகிறது. இங்கிருந்து உருவாக்கப்படும் இலவம் பஞ்சுகளின் மெத்தை மற்றும் தலையணைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் விலையோ அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

கடந்தாண்டு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒருகிலோ இலவம்பஞ்சு நடப்பாண்டும் அதிக விலைக்கு விற்பனையாகும் என நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இலவம்பஞ்சு 40 ரூபாய்க்கும் கீழே விற்பனையாவதால் அதனைப் பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடும் சூழலுக்கு அப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலவம்பஞ்சை எடுக்கும் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கூலியும், பஞ்சை பிரித்துத் தரும் பெண்களுக்கு 400 ரூபாயும் கூலியாக வழங்கப்படும் நிலையில், சாகுபடிக்குச் செய்த செலவைக் கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மகசூல் கொடுக்கும் இந்த இலவம் பஞ்சு விவசாயம் இந்த ஆண்டு ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு சாகுபடி செய்யும் எண்ணத்தையும் விவசாயிகள் கைவிடத் தொடங்கியுள்ளனர். எனவே தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு இலவம்பஞ்சுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: Severe price drop: Low-income farmers lose their livelihoodஇலவம்பஞ்சு விவசாயிகள்இலவம் பஞ்சு விலை சரிவுtn agricultureவிவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

Related News

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

அஜித் படுகொலை : காவல்துறையினர் மீது பொதுமக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? : அண்ணாமலை கேள்வி!

இங்கிலாந்தில் வாட்டி வதைக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies