ஜூனியர் தெற்காசியக் கால்பந்து தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் தகுதி பெற்றன.
இறுதிப்போட்டி 1-க்கு 1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பெனால்டி ஷூட் அவுட்டில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் வங்கதேச அணியை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.