வேதாரண்யத்தில் பெய்த மழையால் உப்பு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாகப் பெய்த கனமழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வாரக் காலமாகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.