தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பங்கேற்று ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வலியுறுத்தினர்.
மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருவதால் வேலையிழப்பு அதிகரித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சமூக பொருளாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.