டாஸ்மாக் முறைகேடு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Oct 1, 2025, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டாஸ்மாக் முறைகேடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
May 22, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டாஸ்மாக்கில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாகவும், டாஸ்மாக் அதிகாரிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ள டாஸ்மாக் முறைகேடு வழக்குகளின் தற்போதைய விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில், டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக 41 வழக்குகளை லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளதாகவும், வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதங்களைக் கேட்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், குற்றஞ் சாட்டப்பட்டவர்களைச் சேர்க்கும் வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட மாட்டாது என உத்தரவாதம் அளிக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தரப்பு, அடுத்த விசாரணை வரை டாஸ்மாக் முறைகேடு தொடர்பான எந்த வழக்கையும் முடிக்கக்கோரி கீழமை நீதிமன்றங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம் என உள்துறை செயலாளருக்கு அறிவுறுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள 41 வழக்குகளின் விசாரணை நிலை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

Tags: தமிழக அரசுசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவுTASMAC scam - Madras High Court orders Tamil Nadu government
ShareTweetSendShare
Previous Post

பாரத நாடு கூறுவதை இன்று பிற நாடுகள் கேட்கின்றன : ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

பாகிஸ்தானில் நடக்கும் கூத்து : தோல்வியுற்ற ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி!

Related News

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

பொறி வைத்து பிடித்த போலீசார் – ரயில் நிலையங்களில் கைவரிசை காட்டிய ஹவாரியாஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : நினைவு அஞ்சல் தலை, நாணயத்தை நாளை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies