பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் - குழம்பும் வெள்ளை மாளிகை!
May 24, 2025, 11:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

Web Desk by Web Desk
May 24, 2025, 09:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பாகிஸ்தான் நிலைப்பாட்டில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தலைவர்களைப் பாராட்டிய ட்ரம்பின் இந்த கொள்கை மாற்றம் எதைக் காட்டுகிறது என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு எந்த இடங்களிலிருந்து தொடர்ந்து ஆதரவு வழங்கப்பட்டு வருவது குறித்த உளவுத் தகவல்களின் அடிப்படையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள், நேரடி போர் பயிற்சியைத் தவிர, முறையாக ஒருங்கிணைக்கப்பட்ட நிதி, தளவாடங்கள், கோட்பாடு மற்றும் ராணுவ ஆதரவு வடிவில் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் அதன் உளவு அமைப்பான ISI நிறுவனத்திடமிருந்து ரகசிய உதவியைப் பெற்று வருகின்றன.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்களுக்கு, இந்தியா கொடுத்த ஏவுகணை தாக்குதல்களைப் பாகிஸ்தானால் தடுக்க முடியவில்லை. பதிலுக்கு இந்தியா மீது 400க்கும் மேற்பட்ட  ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பாகிஸ்தான் ஏவியது. ஆனாலும், பாகிஸ்தான்  ஏவுகணை மற்றும் ட்ரோன்களால்  இந்தியாவின்  வான் பாதுகாப்பு அமைப்பை ஊடுருவ முடியவில்லை.

இதனையடுத்து இந்தியா, பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை அழித்தது. மேலும்,பாகிஸ்தானின் முக்கிய விமானத் தளங்களைச் சுக்கு நூறாக்கியது. இந்தியாவின் பதிலடியைத் தாங்க முடியாத அணு ஆயுத நாடான பாகிஸ்தான் இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி மன்றாடியது. இனி எல்லை தாண்டிய  பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால், அதைப் போர் அறிவிப்பாகக் கருதி, மீண்டும் பாகிஸ்தானைத் தாக்குவோம் என்று இந்தியா வெளிப்படையாக எச்சரித்தது.

சர்வதேச பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான்  ராணுவத் தளபதிகள் கலந்து கொண்டதும் . கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அரசு மரியாதை செலுத்தியதும், பயங்கரவாதத்துக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள தொடர்பை அம்பலப் படுத்தியது.

பாகிஸ்தானுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே இருக்கும் என்று இந்தியா தெளிவு படுத்தியது. இரத்தமும் தண்ணீரும் ஒன்றாகப் பாய முடியாது என்று  சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியக் காலவரையறை இன்றி நிறுத்தியது.

பயங்கரவாதத்தைக் கைவிடாவிட்டால், பாகிஸ்தான்  அழிக்கப்படும் என்று இந்தியா எச்சரித்தது. இறுதியாக, அணு ஆயுத அச்சுறுத்தலைப்  பொறுத்துக்கொள்ளாது என்றும், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்துவது பற்றியும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் இந்தியா கூறியது.

இதற்கிடையே, இந்தியாவின் ரஃபேல் விமானத்தைப் பாகிஸ்தானின் சீனப் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் தாக்கி அழித்தன என்று பாகிஸ்தான் பொய் பிரச்சாரத்தைத் தொடங்கியது.

பாகிஸ்தான் ராணுவம் தோற்று விட்டது என்ற உண்மை தெரிந்துவிட்டால், பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் தாலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் தாலிபான்களால் நாட்டுக்குப் பாதுகாப்பு நெருக்கடி ஏற்படக் கூடும் என்ற அச்சமே பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்துக்குக்   காரணம் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக, ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து விளக்கவும், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததை நியாயப்படுத்தவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ராஜ்ஜிய துறை அதிகாரிகள் அடங்கிய  ஏழு குழுக்களை  உலகின் ஏழு மூலைகளுக்கும் இந்தியா அனுப்பி வைத்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராஜதந்திர தாக்குதல் பற்றி விளக்க 32 நாடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக இருக்கும்  சியரா லியோன், அல்ஜீரியா, பனாமா மற்றும் கயானா ஆகிய நாடுகளுக்கும் இந்தியக் குழுக்கள் சென்றுள்ளன.

இதற்கிடையே, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஒவ்வொரு ஐரோப்பிய நாடும், இந்தியா தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் உரிமைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. அரபு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன.

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி வழங்கிய சீனா. துருக்கியை இந்தியா அடையாளம் கண்டு விலக்கியுள்ளது. அதேபோல், பாகிஸ்தானுடனான உறவை வலுப்படுத்தி வரும் வங்கதேசம், நேபாளம், பூட்டான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கும் இந்தியா விளக்கமளிக்க ராஜதந்திர குழுக்களை அனுப்பவில்லை.

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலுக்கு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை நம்ப வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் இந்தியா இஸ்ரேலுக்குக் குழுவை அனுப்பவில்லை. மற்ற நாடுகள் அமைதியைப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த வேளையில், இந்தியாவின் தற்காப்பு உரிமையை இஸ்ரேல் ஆதரிக்கிறது என்றும்,  அப்பாவிகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களைச் செய்துவிட்டு ஒளிந்து கொள்ள இடமில்லை என்பதைப் பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல்தான் உடனடியாக  கூறியது.

இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக முதலில் அறிவித்த ட்ரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றத்தைத் தவிர்க்க உதவ முன்வருவதாகக் கூறினார். முன்னதாக ஈரானும் இதையே சொல்லியிருந்தது.  பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த ஒரு நாடும் மத்தியஸ்தம் செய்வதை விரும்பவில்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்தால், அணு ஆயுத போர் உருவாகும் என்ற  இந்த அச்சத்தைத் தூண்டவே பாகிஸ்தான் விரும்புகிறது. அணு ஆயுதப் போரைத் தடுத்ததாகவும், லட்சக்கணக்கான   உயிர்களைக் காப்பாற்றியதாகவும் கூறியுள்ள ட்ரம்பின் கருத்துக்கள், பாகிஸ்தானின் திட்டத்துக்கு மறைமுகமாக உதவுகிறது.

சமீபத்தில்,தென்னாப்பிரிக்க அதிபரை வைத்துக் கொண்டு,பாகிஸ்தானின் தலைவர்களை ட்ரம்ப் பாராட்டிய தோடு,பிரதமர் மோடியையும் வணங்குவதாகச் சொன்னார். பாகிஸ்தான் தலைவர்களை,சீனாவும் மற்ற இஸ்லாமிய நாடுகளும் கூட இதுவரை பாராட்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  அதிபர் ட்ரம்ப் கொடுத்த ஆதரவின் காரணமாகவே, பாகிஸ்தான் அரசு , ராணுவத்  தலைமை தளபதி அசிம் முனீரை நாட்டின் இரண்டாவது Field Marshal ஆக உயர்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு, 130 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவுடன் இருதரப்பு வர்த்தகத்தைச் செய்த இந்தியா,  அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ட்ரம்பின் பாகிஸ்தான் நிலைப்பாடு ஒரே குழப்பமாக உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகளே தெரிவித்துள்ளனர்.

Tags: Indiaஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்ஆப்ரேஷன் சிந்தூர்Why support Pakistan? : Trump makes a U-TURN - White House in turmoilTURN அடித்த ட்ரம்ப்பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்
ShareTweetSendShare
Previous Post

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

Related News

பாக்.,கிற்கு ரூ.30,000 கோடி இழப்பு : சின்னாபின்னமான பாகிஸ்தான் விமானப்படை!

சுற்றுலாப்பயணிகள் அதிருப்தி : மதுப்பிரியர்கள் கூடாரமான சாலையோர பூங்காங்கள்!

கேள்விக்குறியான வாழ்வாதாரம் : நத்தை வேகத்தில் நடக்கும் மேம்பால பணியால் தவிப்பு!

அமெரிக்காவின் GOLDEN DOME : அதிநவீன வான்வெளி ஏவுகணை பாதுகாப்பு!

ஹார்வர்ட் Vs ட்ரம்ப் : சர்வதேச மாணவர்கள் சேர்க்கைக்கு செக்!

11 மணி உதயநிதி : திமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவு ஏன்? : U -TURN அடித்த ட்ரம்ப் – குழம்பும் வெள்ளை மாளிகை!

பாமகவுக்கு நான் தான் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி முழு ஆதரவு!

பணியிடங்களில் பெண்களுக்கு முன்னுரிமை அளித்து மரியாதையுடன் நடத்தும் வகையில் சட்டம் இயற்றவேண்டும் – பிரதமர் மோடி

கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை!

சொத்து வரி உயர்வுக்கு இபிஎஸ் கண்டனம்!

மாவோயிஸ்ட் தலைவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை : 24 மாவோயிஸ்டுகள் சரண் – பாதுகாப்புப் படையினர் தகவல்!

திமுக என்றாலே ஊழல் : எச். ராஜா விமர்சனம்!

நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனின் 80-வது பிறந்தநாள் விழா : ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் வாழ்த்து!

பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies