தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் அதிக காற்றுடன் (மணிக்கு 45 முதல் 50 கிலோமீட்டர் வேகம் வரை) மிதமான மழை முதல் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதியிலும் நீலகிரி மாவட்டத்திலும் கனமழை முதல் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தேனி கன்னியாகுமரி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது…
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், ஒரு சில இடங்களில் இடு மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழக கடலோரப் பகுதிகள் மன்னார் வளைகுடா குமரிக்கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மட்டர் வேகத்தில் வீச கூடும் என்றும் சில நேரங்களில் 55 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று வீச கூடு என்றும் இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.