திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நூதன முறையில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாயுடுபுரம் பகுதியில் அமைந்துள்ள பாக்கியபுரம் எனும் இடத்தில் நாகூர் கனி என்பவர் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்று வந்துள்ளார்.
சந்தேகத்தின் அடிப்படையில் அவரை போலீசார் விசாரித்ததில் அவர் கேரள மாநிலத்தில் அச்சிடப்படும் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.