காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் கயானா நாட்டிற்கு சென்ற நிலையில், அந்த நாட்டின் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர், கயானா நாட்டிற்கு சென்றனர். அவர்களை இந்திய வம்சாவளியினர் சிறப்பாக வரவேற்றனர். இதனைதொடர்ந்து கயானாவில், அந்நாட்டின் துணை அதிபர் பாரத் ஜக்தியோவை, சசி தரூர் தலைமையிலான அனைத்து கட்சி குழுவினர் நேரில் சந்தித்து ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்தஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சசி தரூர், துணை அதிபர் ஜக்தியோ நம்முடைய நாட்டின் நண்பர் என்றும், பாகிஸ்தான் உடனான சமீபத்திய நிகழ்வுகளில் நம்முடைய நிலையை பற்றி பெரிய அளவில் அவருக்கு புரிதல் இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, பெர்பிஸில் உள்ள ஆல்பியன் விளையாட்டு வளாகத்தில் கயானாவின் 59-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்த நாட்டின் தேசியை கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.