இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் மீதான தீவைப்பு தாக்குதல்களில் புதனுக்குத் தொடர்பு இருக்கலாம் என இங்கிலாந்து உளவுத்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்குப் பிரிட்டன் அளித்த ஆதரவிற்குப் பதிலளிக்கும் விதமாக இந்த தாக்குதல்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ரஷ்ய உளவாளிகள் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டதால், தாக்குதல்களை நடத்த ரஷ்யா, வெளிநாட்டினரைச் சேர்ப்பதாகவும் உளவுத்துறை நிபுணர்கள் கூறியுள்ளனர்.