3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பதாக நாடகம் நடத்திவிட்டு, இப்போது சென்றது ஏன்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ஏதோ டெல்லிக்குப் போய் தமிழ்நாட்டிற்கான நிதியாகப் பல ஆயிரம் கோடி ரூபாய்களை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே? என முதலமைச்சருக்குக் கேள்வி எழுப்பிய அவர், நிதிகளையும், அவர்களுக்குத் துணையான தம்பிகளையும் காப்பற்றிவிடலாம் என்ற ஆசையில் தானே டெல்லி சென்றீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
மத்தியில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் ஊழலுக்கான தண்டனையிலிருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் வீட்டுத் தம்பி ஆவதற்கு முன் ரத்தீஷுக்கு என்ன சொத்து இருந்தது என்பது குறித்துப் பேசத் தயாரா? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
பின்னால் சட்டை கிழிந்தாலும், முன்னால் மேக்கப் கலையாமல் மிஷன் சக்சஸ் என்ற முதல்வரின் கூவலுக்குப் பின்னால், மிஷன் ஃபெயிலியரான கண்ணீர் நன்றாகப் புரிவதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார்.