குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்ட ஒன்பதாயியிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
2 நாள் பயணமாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, வதோதராவில் வாகனப் பேரணி மேற்கொண்டார். அப்போது இருபுறமும் திரண்ட மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அந்த பேரணியில், கர்னல் சோபியா குரேஷியின் குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து தாஹோத் பகுதியில் இந்திய ரயில்வேயின், ரயில் எஞ்சின் உற்பத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த ஆலையில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் மின்சார ரயில் எஞ்சினையும் கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஒன்பதாயிரம் HP திறன் கொண்ட ரயில் இன்ஜின் உற்பத்தி அலகையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார்.