பாதுகாப்புப் படைகளும், பொருளாதாரமும் வலுவாக இருக்கும்போது மட்டுமே வளர்ச்சியடைந்த பாரதம் சாத்தியமாகும் எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் தாஹோத் பகுதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், பாகிஸ்தானின் ஒரே குறிக்கோள் இந்தியாவுடன் பகைமையை வளர்த்து தீங்கு விளைவிப்பது மட்டுமே எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்தியாவின் குறிக்கோள் வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தை வலுப்படுத்தி, அனைத்து சேவைகளையும் மேம்படுத்துவது எனவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க நாம் இவை அனைத்தையும் செய்ய வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.