உலக அதிசயமான தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு கவசம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தான் மோதலின்போது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாரா உள்ளிட்ட முக்கிய இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இதை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்நிலையில் டிரோன் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் தாஜ்மஹாலில் டிரோன் எதிர்ப்பு பாதுகாப்பு கவசம் அமைக்க உத்தரப்பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது.
7 முதல் 8 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் டிரோன்களை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் வகையிலான டிரோன் எதிர்ப்பு கவசம் தாஜ்மஹாலில் அமைக்கப்பட உள்ளது.