அரக்கோணம் மாணவி பாலியல் வழக்கில் திமுக பிரமுகரான தெய்வச்செயலைக் காக்கத் துடிப்பது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் கேள்விகள் ஓயாது என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அரக்கோணம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காணொலி வெளியிட்டுள்ளதாகவும், திமுக பிரமுகரான தெய்வச்செயல் மீது தைரியமாகப் புகார் அளிக்க வந்த மாணவியை காவல்துறை மிரட்டுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் ஏவல்துறையாக காவல்துறை இருப்பதால் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ள அவர், பள்ளி மாணவர்களின் புத்தகப் பையில் அரிவாளைத் தாண்டி, சர்வ சாதாரணமாக ஆட்டோமேட்டிக் துப்பாக்கிகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரக்கோணம் மாணவி பாலியல் வழக்கில் திமுக பிரமுகரான தெய்வச்செயலைக் காக்கத் துடிப்பது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் கேள்விகள் ஓயாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தாம் எப்போதும் சொல்வது போல, திமுக ஆட்சி முடியும் வரை திமுகவினரிடம் இருந்து மக்களே தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் எனவும் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.