கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை முழுமையாக தொடங்கியுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக 2 மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.