மழை எச்சரிக்கை காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
உதகை கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தவளை மலை பகுதியில், பாறை சரிந்து விழுத் அபாயம் இருப்பதால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.