நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்விணி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 14 காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். அதன்படி, நெல் குவிண்டாலுக்கு ஆதரவு விலையாக 2 ஆயிரத்து 369 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மேலும் கிசான் கிரெடிட் கார்டு மூலம் விவசாயிகளுக்கான வட்டி மானியம் வழங்க 15 ஆயிரத்து 642 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.