உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சிக்கிம், கோவா மாநிலங்கள் உருவான தினவிழா சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியால்தான் மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்பட்டதாக தெரிவித்தார்.
உலகில் அனைவருடைய நம்பிக்கைகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரே நாடு பாரதம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆப்ரேஷன் சிந்தூர் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக தெரிவித்தார்.