பாரம்பரிய கலைகளை வளர்க்கும் வகையில் பழனி மலைக் கோயிலில் வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.
வேடசந்தூர் தாலுகா மேல் மாத்தினி கிராமத்தைச் சேர்ந்த ஓம் கந்தன் கும்மி கலைக்குழு சார்பில் கும்மியாட்ட நிகழ்வு நடைபெற்றது.
பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும், முருகனின் பெருமைகளை எடுத்துரைக்கும் வகையிலும் இந்த நடன நிகழ்ச்சியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.