ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டம் பாஸ்குசான் பகுதியில் பதுங்கியிருந்த 2 லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து பிடித்தனர்.
அவர்கள் இர்பான் பஷீர் மற்றும் உசைர் சலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 2 ஏகே 56 துப்பாக்கிகள், 2 கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.