செய்த தவறை மறைத்து மக்களிடமும், கட்சியினரிடமும் அன்புமணி அனுதாபம் பெற முயற்சிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தர்மபுரியில் அன்புமணி பேசியது முழுக்க முழுக்க மக்களை திசை திருப்பும் முயற்சி என தெரிவித்தார். கட்சி நிர்வாக குழுவில் பேசுபவர்களை பேசவிடாமல் அன்புமணி தடுப்பதாகவும், அவருக்கு தலைவர் என்ற பண்பு சிறிதளவு கூட இல்லை என்றும ராமதாஸ் கூறினார்.
45 ஆண்டுகால அரசியலில் கட்சிக்கு அவப்பெயரை அன்புமணி பெற்று தந்துவிட்டார் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.