மனதின் குரல் நிகழ்ச்சியை கொண்டு சேர்த்த தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பல்வேறு தலைப்புகள் குறித்து நாட்டு மக்களுடன் மாதந்தோறும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி கலந்துரையாடும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இம்மாதம் கடந்த 25-ஆம் தேதி நிகழ்ந்த மனதின் குரல் நிகழ்ச்சியை நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பூத்-களுக்கு கொண்டு சேர்த்துள்ளனர் நமது தமிழக பாஜக
நிர்வாகிகள். அதிலும் குறிப்பாக அதிக அளவிலான மக்களிடம் மனதின் குரல் நிகழ்ச்சியை கொண்டு சேர்த்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்து சாதனை புரிந்துள்ள நமது தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர் திரு. @sidhrangathanr அவர்களுக்கும், மதுரை நகர் மாவட்டத் தலைவர் திரு. @maribjymtn அவர்களுக்கும், புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. @jagadeesandv அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதே போல் மேலும் பல மக்களிடம் நமது மாண்புமிகு பிரதமர் அவர்களின் உரையைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அனைத்து நிர்வாகிகளையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.