ஜேசிபி வாகனத்திற்கான உயர்த்தப்பட்ட கட்டணத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையம் பகுதியில் ஜேசிபி வாகனங்களை நிறுத்தி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஜே.சி.பி. வாகனங்களின் குறைந்தபட்ச வாடகை மணிக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் என்றும், இரண்டு மணி நேரத்திற்கு மூன்றாயிரத்து ஐநூறு ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு இந்த விலை உயர்வை தெரியப்படுத்தவே அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதாக, நாமக்கல் மாவட்ட ஜேசிபி வாகன உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.