மதுரையில் முதலமைச்சர் ரோடு ஷோவிற்காக அவசர அவசரமாக சாலை பணிகள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் வரும் ஞாயிறன்று திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் சனிக்கிழமை மதியம் வருகை தர உள்ளார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து அழகர் கோவில் சாலையில் உள்ள தங்கும் விடுதி வரை முதலமைச்சர் ஸ்டாலின் ரோட் ஷோ நடத்த உள்ளார்.
இதற்காக அந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் அவசர அவசரமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சீரமைக்கப்படாமல் இருக்கும் நிலையில் முதலமைச்சரின் வருகைக்காக சாலைகள் சீரமைக்கப்படுவதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.