திருச்சி அருகே பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த 7 ஆண்டுகளாக, 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள குமார வயலூர், எட்டரை, கோப்பு, குழுமணி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பாசனத்திற்கு உரியத் தண்ணீர் வசதி கிடைக்காத நிலை உள்ளது. இதனால் சுமார் 7 ஆண்டுகளாக அங்குள்ள 500 ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாகிக் கிடக்கின்றன.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், விவசாயிகள் பலர் பிழைப்பிற்காகக் கூலி வேலைகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதேபோல, தரிசு நிலங்களை மேம்படுத்த அரசு கொண்டு வரும் திட்டங்களை மாவட்ட அதிகாரிகள் முறையாகச் செயல்படுத்துவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தலையிட்டு தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்