திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சென்றுக்கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக 5 பேர் உயிர் தப்பினர்.
குண்டடத்தை சேர்ந்த சொர்ண ராஜ்குமார் என்பவர் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர்களை அழைத்துக்கொண்டு தாராபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை எழுந்தது இதனைக் கவனித்த சொர்ண ராஜ்குமார் அனைவரையும் காரில் இருந்து வெளியேற்றினார். இதனையடுத்து கார் முழுவதும் தீ பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.